வேலூர்
வேலூர் மக்களவைத் தேர்தல்: மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி
வேலூர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
வேலூர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இத்தேர்தலில் மண்டல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான இப்பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன், சார்-ஆட்சியர் மெகராஜ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் ராஜ்குமார், தாட்சாயணி, உதவித் தேர்தல் அலுவலர்கள், மண்டலத் தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.