லாரி மீது கார் மோதல்: 5 பேர் காயம்
By DIN | Published On : 24th July 2019 06:55 AM | Last Updated : 24th July 2019 06:55 AM | அ+அ அ- |

நாட்டறம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முஷ்டாக் அகமது(65). அவர் தனது உறவினர்கள் இஷ்டாக் அகமது ((35), சம்ஷாத் பேகம்(60), அலீனா(30), சுமோரா(20) ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை காலை பெங்களூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.
நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் பெட்ரோல் நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென முன்னால் சென்ற லாரியின் மீது அவர்களது கார் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் காயமடைந்தனர். அவர்ளை அங்கிருந்தவர்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.