வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை

வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டர். 

வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டர். 
வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு  வட்டாரப் போக்குவரத்து அலுவலராக அசோகன் பணியாற்றினார். அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் சில ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டதாகத் தெரிகிறது. தற்போது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பணியாற்றி வருகிறார். 
இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு துறையைச் சேர்ந்த 3 போலீஸார் புதன்கிழமை வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்திருந்தனர். அப்போது 2015-ஆம் ஆண்டில் எடுத்துச் செல்லப்பட்ட சில ஆவணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com