தண்டவாள பராமரிப்பு பணி:  ரயில் சேவையில் மாற்றம்

சென்னை-அரக்கோணம் பிரிவில், கடம்பத்தூர் யார்டில் தண்டவாளப் பராமரிப்புப் பணி நடப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை-அரக்கோணம் பிரிவில், கடம்பத்தூர் யார்டில் தண்டவாளப் பராமரிப்புப் பணி நடப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 மூர்மார்க்கெட் வளாகம்-அரக்கோணம் இடையே ஜூன்  20, 22, 24 ஆகிய தேதிகளில் இரவு 10.10, 10.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் திருவள்ளூர்-திருவாலங்காடு நிலையங்கள் இடையே விரைவுப் பாதையில் இயக்கப்படும். 
எனவே, இந்த மின்சார ரயில்கள் செஞ்சி பானம்பாக்கத்தில் நிறுத்தப்படாது. சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே ஜூன் 19, 21, 23, 25 ஆகிய தேதிகளில் அதிகாலை 1.20 மணிக்கு இயக்கப்படும்  மின்சார ரயில் திருவள்ளூர்-திருவாலங்காடு இடையே வேகப் பாதையில் இயக்கப்படும். எனவே, இந்த ரயில் செஞ்சி பானம்பாக்கத்தில் நிறுத்தப்படாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com