சென்னை-அரக்கோணம் பிரிவில், கடம்பத்தூர் யார்டில் தண்டவாளப் பராமரிப்புப் பணி நடப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மூர்மார்க்கெட் வளாகம்-அரக்கோணம் இடையே ஜூன் 20, 22, 24 ஆகிய தேதிகளில் இரவு 10.10, 10.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் திருவள்ளூர்-திருவாலங்காடு நிலையங்கள் இடையே விரைவுப் பாதையில் இயக்கப்படும்.
எனவே, இந்த மின்சார ரயில்கள் செஞ்சி பானம்பாக்கத்தில் நிறுத்தப்படாது. சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே ஜூன் 19, 21, 23, 25 ஆகிய தேதிகளில் அதிகாலை 1.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் திருவள்ளூர்-திருவாலங்காடு இடையே வேகப் பாதையில் இயக்கப்படும். எனவே, இந்த ரயில் செஞ்சி பானம்பாக்கத்தில் நிறுத்தப்படாது.