பைக்கிலிருந்து தவறி விழுந்து பெண் சாவு

நாட்டறம்பள்ளி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் இறந்தார்.

நாட்டறம்பள்ளி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் இறந்தார்.
வாணியம்பாடி சின்ன வேம்பம்பட்டு கலந்திரா பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி ஜெயலட்சுமி (53). இவர், தனது மகன் புருசோத்தமனுடன் கிருஷ்ணகிரியில் இருந்து நட்டறம்பள்ளிக்கு ஞாயிற்றுக்கிழமை பைக்கில் வந்து கொண்டிருந்தார். 
தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி மேம்பாலம் அருகே சென்றபோது, ஜெயலட்சுமி பைக்கில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஜெயலட்சுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினார். 
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com