அரக்கோணத்தில் கழிவுநீர்க் கால்வாயில் இருந்து பெண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
அரக்கோணம் கிரிபில்ஸ்பேட்டை பஜனை கோயில் தெருவில் கழிவுநீர்க் கால்வாயில் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதாக அரக்கோணம் நகர போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த ரகுபதியின் மனைவி வள்ளி (45) என்பதும், இவர் சற்று மனநிலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. அரக்கோண் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.