வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி வித்யாஸ்ரம் சிபிஎஸ்இ பள்ளியின் 4-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் தாளாளர் ராஜாராம் தலைமை வகித்தார். வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார்.
பள்ளி அறக்கட்டளை அறங்காவலர் எம்.சுரேஷ்பாபு, முதல்வர் கங்காதேவி ஆகியோர் கலந்துகொண்டனர்.