வேலூர் அருகே மண்ணெண்ணெய் குடித்த குழந்தை சனிக்கிழமை இறந்தது.
வேலூர் பெரியபாலம்பாக்கத்தை சேர்ந்த விஜயகுமாரின் மகள் கீர்த்தனாஸ்ரீ (2). கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெயைத் தண்ணீர் என நினைத்துக் குடித்துள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றிக் குழந்தை இறந்தது. வேலூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.