தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த 2 பெண்கள் உள்பட 10 பேர் கைது

வாணியம்பாடியில் தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த 2 பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாணியம்பாடியில் தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த 2 பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர் நூருல்லாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்ரப் ஆரிப் (42) தொழிலதிபர். இவரது தாயைப் பார்த்துக் கொள்ள செவிலியர் தேவைக்காக கடந்த 16-ஆம் தேதி வாணியம்பாடிக்கு வந்தார். அப்போது, வாணியம்பாடியைச் சேர்ந்த அபிதா (48) என்ற பெண்ணைப் பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். வீட்டுக்குள் நுழைந்தபோது, திடீரென மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து அப்துல்ரப் ஆரிப்பை அரை நிர்வாணமாக்கி அவரது பக்கத்தில் ஒரு பெண்ணை நிறுத்தி செல்லிடப்பேசியில் படம் பிடித்து, அவரிடம் ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டினர். மேலும் அவரது கையில் இருந்த ரூ. 4 ஆயிரம் மற்றும் ஏடிஎம் அட்டையைப் பறித்துக் கொண்டனர். பின்னர், ஏடிஎம் அட்டை மூலம் ரூ. 2 லட்சத்துக்கு நகைகளை வாங்கிக் கொண்டு, ரூ. 1 லட்சத்தை ஏடிஎம் மையத்தில் இருந்து எடுத்துக் கொண்டனர்.
இதையடுத்து வாணியம்பாடி காதர்பேட்டை அருகில் அப்துல்ரப் ஆரிப்புடன் மர்ம நபர்கள் ஆட்டோவில் வந்தபோது, அவரின் கூச்சல் சப்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் அந்த ஆட்டோவை நிறுத்தினர். அதிலிருந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவர் பிடிபட்டார். மற்றவர்கள் தப்பியோடினர். 
பின்னர், அந்த இளைஞரை வாணியம்பாடி நகரக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். டிஎஸ்பி முரளி தலைமையில் காவல் ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் போலீஸார் நடத்திய விசாரணையில் 2 பெண்கள் உள்பட 10 பேர் கொண்ட கும்பல் தொழிலதிபர் அப்துல்ரப் ஆரிப்பை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. 
இதையடுத்து தலைமறைவாக இருந்த ஆபிதா, ஜெயலாபுதின் (38), ஹசேன் (28), கோவிந்தராஜ் (26), சதாம் உசேன் (23), சாது (24), அஸ்லம் (33), நதீம் (21), மனோஜ்குமார் (20), தாரா (18) ஆகிய 10 பேரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது  செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com