அரக்கோணம் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளராக அக்கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலர் என்.ஜி.பார்த்திபன்(44) அறிவிக்கப்பட்டுள்ளார்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதி முன்னாள் எம்.பி. கோபாலின் மூத்த மகனான இவர் சோளிங்கர் சட்டப்பேரவை தொகுதியில் 2016-இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகி, பின்னர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
சோளிங்கர் நகரக் கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவரான என்.ஜி.பார்த்திபன் அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுகவில் இணைந்தார். இவருக்கு கல்பனா என்ற மனைவியும், அபிநயா, கயல்விழி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.