ஆம்பூர் இஎஸ்ஐ மருத்துவமனையை முழுநேர மருத்துவமனையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடாற்காடு மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளர் சங்கத்தின் மே தினக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆம்பூரில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் நேய.சுந்தர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வி.விஸ்வநாதன், நிர்வாகிகள் பி.சம்பங்கி, எம்.முனிசாமி, சடையாண்டி, எஸ்.விமல், எஸ்.பி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆம்பூர் இஎஸ்ஐ மருத்துவமனையை 30 படுக்கைகள் கொண்ட முழு நேர மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டதை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த அடிப்படை குறைந்தபட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ. 161 ஜூலை 2018 முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.