குடியாத்தம் அருகே மூதாட்டி கொலை

குடியாத்தம் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார்.

குடியாத்தம் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார்.
குடியாத்தத்தை அடுத்த தாட்டிமானப்பல்லி கிராமம், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மறைந்த நாராயணசாமியின் மனைவி வனரோசா(68). அவர் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், அவர் வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் பரதராமி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். 
போலீஸார் வந்து பார்த்தபோது வனரோசா கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக அவர்கள் வழக்குப்பதிவு செய்தனர். சந்தேகத்தின்பேரில் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்  நிலையத்துக்கு அழைத்துச்  சென்று விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com