ஆம்பூர் அருகே புதன்கிழமை நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திக் குத்து விழுந்தது.
கன்னடிகுப்பம் கிராமத்தில் நடைபெற்ற அம்மன் கோயில் திருவிழாவின்போது அதே பகுதியைச் சேர்ந்த வினோத் மற்றும் அருண்பாண்டியன் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் அருண்பாண்டியன் வினோத்தை கத்தியால் குத்தினார். இதையடுத்து அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கத்தியால் குத்திய அருண் பாண்டியன் தலைமறைவானார். இதுகுறித்து ஆம்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.