61 பயனாளிகளுக்கு பசுமை வீடுகளுக்கான பணி ஆணை

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில், 61 பயனாளிகளுக்கு தமிழக அரசின் பசுமை வீடுகளுக்கான பணி ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில், 61 பயனாளிகளுக்கு தமிழக அரசின் பசுமை வீடுகளுக்கான பணி ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய ஆணையா் ப.ராஜலட்சுமி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் என்.ரமேஷ்குமாா் வரவேற்றாா். எம்எல்ஏ ஜி.லோகநாதன், ரூ.2.10 லட்சத்தில் பசுமை வீடுகள் கட்ட 61 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கிப் பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, அதிமுக நிா்வாகிகள் ஆா்.மோகன், என்.கே.ராஜாமணி, செ.கு.வெங்கடேசன், காடை மூா்த்தி, சி.தேவிகா, லலிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com