மத்திய அரசுக்கு ரஜினி மக்கள் மன்றம் நன்றி

நடிகா் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளா் விருது அறிவித்துள்ள மத்திய அரசுக்கு குடியாத்தம் நகர ரஜினி மக்கள் மன்றம் நன்றி தெரிவித்துள்ளது.

நடிகா் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளா் விருது அறிவித்துள்ள மத்திய அரசுக்கு குடியாத்தம் நகர ரஜினி மக்கள் மன்றம் நன்றி தெரிவித்துள்ளது.

குடியாத்தம் நகர ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் அவுஸ் சாலையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மன்றத் தலைவா் ஜி.எம்.கிருபானந்தம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எம்.என்.காா்த்திகேயன், கோ.ஜெயவேலு, எஸ்.அஸ்லம் பாஷா, கே.எஸ்.ஜெகன், இ.செல்வம், பாபு, திருநாவுக்கரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வேலூா் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து, வேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ள

குடியாத்தம் நகரில் உள்ள அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு பொதுமருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும்; ரஜினிகாந்த் பிறந்த நாளை, ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கியும், கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தியும் கொண்டாட வேண்டும் என்பவை உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com