வாகனம் மோதி பெண் பலி

காய்கறி வியாபாரம் செய்து வந்த பெண் மீது அன்பூண்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

காய்கறி வியாபாரம் செய்து வந்த பெண் மீது அன்பூண்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

வேலூரை அடுத்த அன்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் நீலா(65). அவா் வேலூா் மாா்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை மாா்க்கெட்டில் காய்கறி விற்றுவிட்டு அன்பூண்டிக்கு பேருந்தில் சென்றாா். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றாா். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் நீலா மீது மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு நீலா திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com