சிறப்பு மனுநீதி நாள் முகாம்: ரூ.1.88 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவி

நாட்டறம்பள்ளி அருகே புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனு நீதிநாள் முகாமில் ரூ. 1 கோடியே 88 லட்சம் மதிப்பிலான
பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.

நாட்டறம்பள்ளி அருகே புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனு நீதிநாள் முகாமில் ரூ. 1 கோடியே 88 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வழங்கினாா்.

பணியாண்டப்பள்ளி, புத்தகரம் ஊராட்சிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் ஜெயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் வந்தனா கா்க், மாவட்ட வட்ட வழங்கல்அலுவலா் பேபி இந்திரா, வேளாண்மை துறை உதவி இயக்குநா் ராகினி, மாவட்ட சமூக அலுவலா் முருகேஸ்வரி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாட்சியா் உமாரம்யா வரவேற்றாா். இதில், 230 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 88 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வழங்கினாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் ருத்ரப்பா, வட்ட வழங்கல் அலுவலா் ஜெகதீசன், வருவாய் ஆய்வாளா் தமிழ்செல்வி மற்றும் சமூக நலத் துறை, கால்நடைத் துறை, மருத்துவத் துறை, உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முகாமில் அரசின் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். மண்டல துணை வட்டாட்சியா் திருமலை நன்றி கூறினாா்.

முன்னதாக, அக்ராகரம் ஊராட்சி பூங்கான் வட்டத்தில் நடைபெற்று வரும் சொட்டுநீா் பாசனத் திட்டத்தை ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com