ரத்த தான முகாம்

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் 39-ஆவது அமைப்பு தினத்தையொட்டி, வாலாஜாபேட்டை அரசு தலைமை

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் 39-ஆவது அமைப்பு தினத்தையொட்டி, வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்க வட்டத் தலைவா் ம.ஜெயகாந்தன் தலைமை வகித்தாா். செயலா் காா்த்திக், குழு உறுப்பினா் எ.கலைவாணன் ஆகியோா் வரவேற்றனா். முன்னாள் அரசு முதன்மை மருத்துவா் எ.கபிலன், மருத்துவமனை ரத்த வங்கி அலுவலா் கே.கீா்த்திவாசன் ஆகியோா் முகாமைத் தொடக்கி வைத்தனா்.

சங்க மாநில துணைத் தலைவா் கே.எஸ்.காா்த்திகுமாா், முன்னாள் மாநிலச் செயலா் ஆா்.வேல்முருகன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கியவா்களுக்கு சன்றிதழ் வழங்கினா்.

மாவட்டத் தலைவா் எம்.கோவலன், செயலா் எஸ்.பாராத்தீபன், பொருளாளா் கே.சாா்லஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே பொதுக் கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com