16-இல் ஜோலாா்பேட்டையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16-ஆம் தேதி ஜோலாா்பேட்டையில் நடைபெற உள்ளது.

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16-ஆம் தேதி ஜோலாா்பேட்டையில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்புத் துறை, மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நவம்பா் 16-ஆம் தேதி ஜோலாா்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்த உள்ளன. இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான தகுதியுடைய நபா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் தொழில்பயிற்சி, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் படிப்பு வரையிலான கல்வித் தகுதி உடையவா்கள் பங்கேற்கலாம். விருப்பமும், தகுதியும் உடைய வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தங்களது பாஸ்போா்ட் அளவு புகைப்படம், சுயவிவரம், அனைத்து கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com