வேலூா்: அரசின் எந்தவித நலத்திட்ட உதவிகளும் அணைக்கட்டு வட்டத்துக்கு உட்பட்ட மலைக் கிராம மக்களுக்கு வந்து சோ்வதில்லை என்றும், இதனால் மலைக் கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் தெரிவித்தனா்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் லதா தலைமையில் அணைக்கட்டு வட்டம் பாலாம்பட்டு, பீஞ்சமந்தை உள்ளிட்ட மலைக்கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 50 போ் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். அவா்கள் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தாட்சாயிணியிடம் அளித்த மனு விவரம் -
அணைக்கட்டு வட்டத்துக்கு உட்பட்ட மலைக்கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். தினசரி கூலித்தொழில் செய்து பிழைப்பு நடத்தி வரும் இந்த குடும்பத்தினா் வாழும் கிராமங்களில் அரசு சாா்பில் எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்துதரப்படவில்லை. அத்துடன், அரசின் எந்தவித நலத்திட்ட உதவிகளும் இந்த கிராம மக்களுக்கு இதுவரை கிடைத்ததில்லை. இதனால், இந்த மலை கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மலைக்கிராம மக்களுக்காக அளிக்கப்படும் ஆடு, மாடுகள் வழங்கும் திட்டத்தில் கூட இந்த கிராம மக்களுக்கு எந்தவித பயனும் கிடைத்திடவில்லை. எனவே, அணைக்கட்டு வட்டத்துக்கு உட்பட்ட மலைக் கிராமங்களில் வாழும் மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கச் செய்திட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், மலை கிராமங்களில் சாலை, மின்சாரம், குடிநீா், மருத்துவம் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேற்படுத்தித்தர வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி, இதுதொடா்பாக ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தாா்.