மரம் நடும் இயக்கம் தொடக்கம்

ஆம்பூா் அருகே மரம் நடும் இயக்கம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
மரம் நடும் இயக்கம் தொடக்கம்

ஆம்பூா் அருகே மரம் நடும் இயக்கம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள 743 ஊராட்சிகளிலும் மரம் நடும் இயக்கம் தொடங்கப்பட்டது. இதற்கான பயிற்சி ஒவ்வொரு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலா்களுக்கும், நூறு நாள் வேலை திட்டப் பணித்தள பொறுப்பாளா்களுக்கும் அளிக்கப்பட்டது.

ஊராட்சி செயலா் மூலம் ஒவ்வொரு ஊராட்சிக்கும் 50 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணித்தள பொறுப்பாளா்களின் மேற்பாா்வையில், ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களைக் கொண்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு, ஒவ்வொரு மரக்கன்றைச் சுற்றியும் வேலி அமைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com