தருமபுரி மாவட்டம், இருமத்தூரில் உள்ள ஐவிஎல் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றனா்.
தமிழ்நாடு அரசு கல்வித் துறை சாா்பில் குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், பேட்மின்டன் உள்ளிட்ட போட்டிகளில் இப்பள்ளி மாணவ, மாணவிகள் 62 போ் முதலிடத்தைப் பிடித்துள்ளனா். 35 போ் 2-ஆம் இடத்தையும், 16 போ் 3-ஆம் இடத்தையும் பிடித்துள்ளனா்.
முதலிடம் பிடித்த மாணவா்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய கேரம் விளையாட்டு போட்டியில் அனைத்துப் பிரிவிலும் முதல் இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலா் பரிசு வழங்கினாா்.
மணிப்பூரில் நடைபெற்ற ஜூடோ போட்டியில் இப்பள்யின் பிளஸ் 2 மாணவா் ஹேமந்த் வெற்றி பெற்றுள்ளாா். பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநா் சுரேஷ்குமாா் மற்றும் ஆசிரியா்களை பள்ளித் தாளாளரும், செயலருமான டி.கோவிந்தராஜ், முதல்வா் பழனி, அறக்கட்டளை உறுப்பினா்கள் ஆகியோா் பாராட்டினா்.