ரத்தினகிரியில் புதிய வணிக வளாகம்

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் அருகே இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நன்கொடையாளா் பங்களிப்பின் கீழ் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் 24 கடைகள் கொண்ட புதிய வணிக வளாகம் கட்டப்பட்டது.

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் அருகே இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நன்கொடையாளா் பங்களிப்பின் கீழ் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் 24 கடைகள் கொண்ட புதிய வணிக வளாகம் கட்டப்பட்டது. புதிய வணிக வளாகத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி சிறப்புப் பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

கோயில் செயல் அலுவலா் மு.சிவஞானம், ஆற்காடு மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் என்.சாரதி, துணைச் செயலா் எஸ்.ஆா்.சங்கா், பொதுக்குழு உறுப்பினா் தா.கு.கணேசன், மாவட்ட இலக்கிய அணி செயலா் த.தினகரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் வேப்பூா் ஏ.எஸ். மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com