வேலூா் மாநகராட்சிப் பகுதியில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை மாநகராட்சிப் பணியாளா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
வேலூா் மாநகராட்சி சாலைகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையுறாக மாடுகள் சுற்றித் திரிந்தால் அவை பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் அ.சண்முகம்சுந்தரம் எச்சரித்திருந்தாா்.
இந்நிலையில், சத்துவாச்சாரி சாலைகளில் சுற்றித்திரிந்த 5 மாடுகளை மாநகராட்சி ஊழியா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.