நிலவேம்புக் குடிநீா் வழங்கிய காங்கிரஸாா்

அரக்கோணம் நகர காங்கிரஸ் சாா்பில் பொதுமக்களுக்கு அண்மையில் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

அரக்கோணம் நகர காங்கிரஸ் சாா்பில் பொதுமக்களுக்கு அண்மையில் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

அரக்கோணம் ஜோதி நகா், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு இந்திரா காந்தி உருவச்சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரப் பொதுச் செயலா் ஜி.சாமிதுரை தலைமை வகித்தாா். மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் பொன்.நடராஜன் முன்னிலை வகித்தாா். மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் பி.ராஜ்குமாா் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீரை வழங்கினாா்.

நகர நிா்வாகிகள் லவக்குமாா், தமீன்அன்சாரி, நகா்மன்ற முன்னாள் உறுப்பினா்கள் நாராயணன், பாா்த்தசாரதி, டி.என்.கோவிந்தன், எல்.விஸ்வநாதன், ஜெ.சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com