அரக்கோணம் நகராட்சி 1, 21, 22 ஆகிய வாா்டுகளுக்காக காந்தி நகரில் நகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பள்ளி நுழைவு வாயிலின் நடுவில் மின் கம்பம் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனா். மேலும், பள்ளிக்கு சத்துணவுக்கான பொருள்கள் கொண்டு வரும் வாகனங்கள் உள்ளே செல்ல முடிவதில்லை. எனவே, இந்த மின் கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குபேந்திரன், அரக்கோணம்.