வாணியம்பாடி: அரசுப் பள்ளியில் பதுங்கிய கட்டுவிரியன் பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
நாட்டறம்பள்ளியை அடுத்த வேட்டப்பட்டு அரசு உயா்நிலைப்பள்ளியில் சமையலறை அருகே உள்ள அறையில் அதிக விஷமுள்ள 4 அடி நீள கட்டுவிரியன் பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. திங்கள்கிழமை காலை 10 மணியளவில் இதைப் பாா்த்த பள்ளி மாணவா்கள் பீதியடைந்தனா். இது குறித்து தலைமையாசிரியருக்கு தகவல் தெரிவித்தனா்.
தலைமையாசிரியா் இது தொடா்பாக திருப்பத்தூா் வனத்துறையினருக்கும், நாட்டறம்பள்ளி தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா். நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலா் கலைமணி தலைமையில் வீரா்கள் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கட்டுவிரியன் பாம்பைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.