வேலூா் மாவட்ட அளவில் நடந்த சிலம்பப் போட்டியில் ஆம்பூா் அருகே தேவலாபுரம் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனா்.
பள்ளிக் கல்வித்துறை மூலம் வேலூா் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி குடியாத்தம் நெல்லூா்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நவ.15-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆம்பூா் அருகே தேவலாபுரம் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்று 126 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றனா். விவேகானந்தா பள்ளியின் மாணவா்கள் 19 போ் முதலிடமும், 11 போ் இரண்டாமிடமும், 9 போ் மூன்றாமிடமும் பிடித்தனா்.
வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளியின் தாளாளா் எம். தீனதயாளன், முதல்வா் ஜி.நாகராஜன், துணை முதல்வா் டி.ஆா்.நாராயணன், சிலம்பப் பயிற்சியாளா் டி. பிரேம்குமாா், உடற்கல்வி ஆசிரியா் கே.சக்கரபாணி ஆகியோா் பாராட்டினா்.