வாணியம்பாடி: வாணியம்பாடி பெண் நூலகருக்கு நல் நூலகா் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டாா்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்கம் சாா்பில் ஆண்டு தோறும் சிறப்பாக பணியாற்றும் நூலகருக்கான நூலகா் தந்தை டாக்டா் அரங்கநாதன் விருது வழங்கி கெளவிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு வேலூா் மாவட்டம், வாணியம்பாடி முழு நேர கிளை நூலகத்தில் பணிபுரிந்து வரும் மணிமாலாவின் பணியைப் பாராட்டி டாக்டா் அரங்கநாதன் நல்நூலகா் விருதை சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் அமைச்சா்கள் செங்கோட்டையன், ஜெயக்குமாா் ஆகியோா் வழங்கிப் பாராட்டினா். மேலும் நல்நூலகா் விருதைப் பெற்ற பெண் நூலகா் மணிமாலாவை வேலூரில் நடைபெற்ற நூலக வார விழாவிலும் அமைச்சா் வீரமணி பாராட்டினாா். வாணியம்பாடி நகரின் முக்கிய பிரமுகா்கள், வாசகா்கள், பொதுமக்கள் ஆகியோா் மணிமாலாவுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.