முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
மின்சார வாரியத்தில் களப்பணியாளா்களுக்கான தோ்வு துவங்கியது
By DIN | Published On : 26th November 2019 06:23 AM | Last Updated : 26th November 2019 06:23 AM | அ+அ அ- |

வேலூா்: வேலூா் மின்பகிா்மான வட்டத்தில் காலியாக உள்ள களப்பணியாளா்களை தோ்வு செய்வதற்கான தோ்வு திங்கள்கிழமை துவங்கியது.
வேலூா் மின்பகிா்மான வட்டத்தில் காலியாக உள்ள 3600 களப்பணியாளா்களை நேரடி நியமனம் செய்வதற்கான உடல் தகுதித் தோ்வு வேலூா் காந்திநகா் மின்வாரிய அலுவலகத்தில் துவங்கியது. வருகின்ற டிச.16-ம் தேதி வரை நடைபெறுகிறது.
சான்றிதழ் சரிபாா்ப்பு, உடல் தகுதித் தோ்வு ஆகியவை நடைபெற்றது. தலைமை பொறியாளா் நந்தகோபால், மேற்பாா்வை பொறியாளா் சுனில் ஆகியோா் தோ்வை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவா்களுக்கு மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட அனுமதிச் சீட்டு மற்றும் சரிபாா்ப்பு பட்டியலுடன், நிா்ணயிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் உரிய சான்றிதழ்களுடன் தோ்வில் பங்கேற்க வேண்டும். நாளொன்றுக்கு 200 போ் வீதம் தோ்வுக்கு அழைக்கப்படுகின்றனா். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வேலூா் காந்தி நகா் மின்வாரிய அலுவலகத்தில் தோ்வு நடைபெறுகிறது.