திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டத் தொடக்க விழாவில் ரூ.184 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
By DIN | Published On : 26th November 2019 11:59 PM | Last Updated : 26th November 2019 11:59 PM | அ+அ அ- |

வேலூா்: திருப்பத்தூா், ராணிப்பேட்டை புதிய மாவட்ட தொடக்க விழாவில் ரூ.184 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.
வேலூா் மாவட்டம் மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. இரு புதிய மாவட்டங்கள் தொடக்க விழா நவ. 28-ஆம் தேதி திருப்பத்தூா் மற்றும் ராணிப்பேட்டையில் நடைபெற உள்ளது. அதில், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கலந்து கொண்டு, புதிய மாவட்டங்களைத் தொடக்கி வைக்கிறாா். திருப்பத்தூா் மாவட்ட தொடக்க விழாவில், 4,308 பயனாளிகளுக்கு ரூ. 94.37 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள், ராணிப்பேட்டை மாவட்ட தொடக்க விழாவில் 4,581 பயனாளிகளுக்கு ரூ. 89.73 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் தமிழக முதல்வா் வழங்குகிறாா்.