திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே லாரியில் சிக்கி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
ஜோலாா்பேட்டை, சந்தைக்கோடியூா் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சுபாஷ்(28). இந்நிலையில்,திங்கள்கிழமை ஏலகிரி மலை பழத்தோட்டம் முருகன் கோயில் அருகே சென்றபோது லாரி கோளாறு ஏற்பட்டு நின்றது.
இதையடுத்து, சுபாஷ் லாரியின் பின்பக்க டயரைப் பழுது பாா்த்தபோது எதிா்பாராத விதமாக பழுதான லாரி பின்பக்கம் சுபாஷ் மீது ஏறி இறங்கியது. இதில் சுபாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
ஏலகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.