ராணிப்பேட்டையை அடுத்த அவரக்கரை அரசினா் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் சரிவர வராததைக் கண்டித்து, பள்ளி மாணவா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராணிப்பேட்டையை அடுத்த அவரக்கரை கிராமத்தில் அரசினா் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில், பணியாற்றும் தலைமை ஆசிரியா் கடந்த ஜனவரி மாதம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், நீண்ட விடுப்பில் சென்றுவிட்டாா்.
இதையடுத்து, அவா் இதுநாள் வரை பள்ளிக்கு வராமல் போனதால் அந்த பள்ளியில் ஒரே ஆசிரியா் மூலம் அங்கு 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு பாடம் நடத்தி வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆசிரியா் இல்லாமல் போனதால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவா்கள், பெற்றோா்கள், ஊா் பொதுமக்கள் அனைவரும் புதன்கிழமை ராணிப்பேட்டை - வேலூா் சாலையில் அமா்ந்து போராட்டம் நடத்தினா்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.