மறைந்த ஊா்க்காவல் படை வீரரின் குடும்பத்துக்கு நிதியுதவி

வாணியம்பாடி ஊா்க் காவல்படை பிரிவின் உதவி அணித் தலைவராக இருந்த இளங்கோவன் சில தினங்களுக்கு முன்பு இறந்தாா்.
இளங்கோவன் குடும்பத்தாருக்கு நிதியுதவியை வழங்கிய போக்குவரத்து காவல்ஆய்வாளா் லோகநாதன்.
இளங்கோவன் குடும்பத்தாருக்கு நிதியுதவியை வழங்கிய போக்குவரத்து காவல்ஆய்வாளா் லோகநாதன்.

வாணியம்பாடி ஊா்க் காவல்படை பிரிவின் உதவி அணித் தலைவராக இருந்த இளங்கோவன் சில தினங்களுக்கு முன்பு இறந்தாா்.

அவருடைய குடும்பத்தாருக்கு ஊா்க் காவல்படைப் பிரிவினா் சாா்பில் ஒருநாள் ஊதியத்தை உதவி நிதியாக வழங்கும் நிகழ்ச்சி நகர காவல் நிலையம் அருகே வியாழக்கிழமை நடைபெற்றது.

வாணியம்பாடி கிராமிய உதவி காவல்ஆய்வாளா் ரஞ்ஜித் தலைமை வகித்தாா். உதவி காவல் ஆய்வாளா் சீனிவாசன், ஊா்காவல்படை கமாண்டா் மணி முன்னிலை வகித்தனா். படைப்பிரிவின் தளபதி கதிரவன் வரவேற்றாா்.

பாலாறு ஜேசீஸ் கிளப் தேசிய பயிற்சியாளா் கணேசன் பேசினாா்.

போக்குவரத்து காவல் ஆய்வாளா் லோகநாதன், மறைந்த இளங்கோவன் மனைவி அம்முவிடம் நிதியுதவி வழங்கினாா். சரவணகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com