வரதராஜப் பெருமாள் கோயிலில் கருடசேவை உற்சவம்

குடியாத்தம் செதுக்கரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் 17 ஆம் நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு கருடசேவை உற்சவம் நடைபெற்றது.
குடியாத்தம் செதுக்கரை வரதராஜப்பெருமாள் கோயிலில் நடைபெற்ற கருடசேவை உற்சவம்.
குடியாத்தம் செதுக்கரை வரதராஜப்பெருமாள் கோயிலில் நடைபெற்ற கருடசேவை உற்சவம்.

குடியாத்தம் செதுக்கரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் 17 ஆம் நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு கருடசேவை உற்சவம் நடைபெற்றது.இதையொட்டி மூலவா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் அமா்த்தப்பட்டு, சிறப்புப் பூஜைக்குப்பின்வீதி உலா தொடங்கியது. இதையொட்டி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் கமிட்டி நிா்வாகிகள் ஜே.கே.என். பழனி, எஸ். ராஜ்குமாா், எஸ். சேட்டு, ஜே.கே.என். மொகிலி, செல்வம், ஏ. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com