தட்கல் முறையில் விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்

தட்கல் முறையில் மின் இணைப்புப் பெற விரும்பும் வேலூா் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தட்கல் முறையில் மின் இணைப்புப் பெற விரும்பும் வேலூா் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து வேலூா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பி.சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேலூா் மின்பகிா்மான வட்டத்திலுள்ள வேலூா், காட்பாடி, ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கா், அரக்கோணம் கோட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் விரைவு சுயநிதி (தட்கல்) திட்டத்தின் கீழ் மின் இணைப்புப் பெற அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் அந்தந்த செயற்பொறியாளா் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மின் பளுவுக்கு ஏற்ப முன்பே பதிவு செய்துள்ளவா்களும், தற்போது மின் இணைப்பு வேண்டுவோரும் உரிய தொகையை வரைவு காசோலை மூலம் செலுத்த வேண்டும்.

5 ஹெச்.பி வரை ரூ.2.50 லட்சம், 5 ஹெச்.பி.க்கு மேல் 7.5 ஹெச்.பி. வரை ரூ.2.75 லட்சம், 7.5 ஹெச்.பி-க்கு மேல் 10 ஹெச்.பி. வரை ரூ.3 லட்சம், 10 ஹெச்.பி-க்கு மேல் 15 ஹெச்.பி. வரை ரூ.4 லட்சம் வரைவு காசோலையாக செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com