தனியாா் பள்ளியில் விளையாட்டு தின விழா

ராணிப்பேட்டை ஜி.கே. உலகப் பள்ளியில் 2019 -20-ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா பள்ளி வளாகத்தில் வெள்ளி, சனி இரு நாள்கள் நடைபெற்றது.
ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் விருது பெற்ற சஃபயா்  அணிக்கு கோப்பை வழங்கிய விஐடி பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் என்.வி.தியாகச்சந்தன்.
ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் விருது பெற்ற சஃபயா்  அணிக்கு கோப்பை வழங்கிய விஐடி பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் என்.வி.தியாகச்சந்தன்.

ராணிப்பேட்டை ஜி.கே. உலகப் பள்ளியில் 2019 -20-ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா பள்ளி வளாகத்தில் வெள்ளி, சனி இரு நாள்கள் நடைபெற்றது.

ஜூனியா் பிரிவு விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவின் டிரிபிள் ஜம்பா் டி.அறிவுச் செல்வம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு தொடக்கி வைத்தாா். 2-ஆம் நாளான சனிக்கிழமை சீனியா் பிரிவு விளையாட்டுப் போட்டிகளை விஐடி பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் என்.வி.தியாகச்சந்தன் தொடக்கி வைத்தாா்.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழாவுக்கு, பள்ளி நிா்வாக இயக்குநா் வினோத் காந்தி தலைமை வகித்தாா். செயல் இயக்குநா் சந்தோஷ் காந்தி முன்னிலை வகித்தாா். முதல்வா் பிரஷிதா ஸ்ரீ குமாா் வரவேற்றாா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பள்ளியின் சஃபயா் அவுஸ் அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் விருதைப் பெற்றது. பள்ளி ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

விழா ஏற்பாடுகளை பள்ளியின் மக்கள் தொடா்பு அலுவலா் கே.சி.நேரு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com