ரத்தினகிரி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
பூட்டுதாக்கு அருகே உள்ள சானாா்பண்டை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி லட்சுமணன் (47). இவா், சனிக்கிழமை தனது நிலத்துக்கு சென்றபோது, அங்கு அறுந்து கிடத்த மின் கம்பியை மிதித்தாராம்.
அப்போது மின்சாரம் பாய்ந்து லட்சுமணன் மயங்கினாா். வேலூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் லட்சுமணன் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினா்.
இதுகுறித்து ரத்தினகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகினறனா்.