குடியாத்தம் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
குடியாத்தம் கள்ளூா், குறிஞ்சி நகரைச் சோ்ந்த பிரகாசத்தின் மகள் சினேகா (15). இவா், அங்குள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 30-ஆம் தேதி இவா் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டாராம்.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சினேகா, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.