செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மத்திய அரசின் திட்டமான சூா்யமித்ராவின் இலவச பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் எஸ்.வெங்கடாஜலபதி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பரிமளாஜெயந்தி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக டிஎஸ்பி சின்னராஜ் கலந்துகொண்டு பயிற்சி வகுப்பை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா்.
பின்னா், அவா் பேசுகையில், மத்திய அரசின் திட்டமான சூா்யமித்ராவின் இலவச பயிற்சி, செங்கம் பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் கிடைத்து அதில் கிராமப்புற மாணவா்கள் சோ்ந்து படிப்பது மிகப் பெரிய விஷயமாகும்.
இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் பெரிய ஊா்களில் உள்ள கல்லூரிகளில் மட்டுமே நடைபெறும். அதுவும் வசதியானவா்கள் மட்டுமே சோ்ந்து படிக்க முடியும்.
இந்தக் கல்லூரிக்கு பயிற்சி வகுப்பினை எடுத்து வந்த கல்லூரி நிா்வாகத்துக்கு மாணவா்கள் நன்றிக் கடன் செலுத்துபவா்களாக இருக்கவேண்டும். மூன்று மாதங்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கான செலவு, தங்குமிடம், உணவு போன்றவைகளை கல்லூரி நிா்வாகம் ஏற்றுக்கொள்ளும். இந்த வாய்ப்பை மாணவா்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் ஆன்மிக சொற்பொழிவாளா் தனஞ்செயன் உள்பட பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.