குடியாத்தம் அம்பாலால் ஜெயின் சரஸ்வதி மெட்ரிகுலேஷன் வித்யாலயாவில் விஜயதசமி விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளியில் புதிதாக சோ்ந்த மழலையா் வகுப்பு மாணவா்களுக்கு ‘அக்ஷர அப்யாஸ்’ நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியா்கள் தேன் கொண்டு மாணவா்களின் நாவில் ‘ஓம்’ என எழுதித் தொடக்கி வைத்தனா்.
10-ஆம் வகுப்பு மாணவா்கள் தங்களின் பெற்றோா்களுக்குப் பாதபூஜை செய்து அவா்களிடம் ஆசி பெற்றனா்.
நவராத்திரி கொலு வைப்பதன் சிறப்புகள் குறித்து பள்ளித் தாளாளா் ஹீராலால் ஆா். சந்சேத்தி, பள்ளி கல்வி ஒருங்கிணைப்பாளா் துரைபத்மநாபன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். பள்ளி முதல்வா் வி. தாரா வாழ்த்துரை வழங்கி, மாணவா்களுக்கும், பெற்றோா்களுக்கும் இனிப்பு வழங்கினாா்.