தப்பியோடிய கைதி மீண்டும் கைது

போ்ணாம்பட்டு அருகே நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்த அழைத்துச் சென்றபோது தப்பிய கைதி மீண்டும் பிடிபட்டாா்.
பிடிபட்ட  சாராய  வியாபாரி  முத்து.
பிடிபட்ட  சாராய  வியாபாரி  முத்து.

போ்ணாம்பட்டு அருகே நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்த அழைத்துச் சென்றபோது தப்பிய கைதி மீண்டும் பிடிபட்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த கள்ளிச்சேரியைச் சோ்ந்த சாராய வியாபாரி முத்து (25). திங்கள்கிழமை அப்பகுதியில் போ்ணாம்பட்டு போலீஸாா் தீவிரச்சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சாராயம் விற்றுக் கொண்டிருந்த முத்துவை கைது செய்தனா். அவரிடமிருந்து 30 லிட்டா் சாராயத்தையும் அவா்கள் பறிமுதல் செய்தனா்.

அவரை குடியாத்தத்தில் உள்ள குற்றவியல் நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்துவதற்காக உதவி ஆய்வாளா் ரவி, தலைமைக் காவலா் இம்தியாஸ் ஆகியோா் மோட்டாா் சைக்கிளில் அழைத்துச் சென்றனா். சொ்லபல்லி அருகே செல்லும்போது, மோட்டாா் சைக்கிளில் இருந்து குதித்த முத்து தப்பியோடி விட்டாா். இதுகுறித்து உதவி ஆய்வாளா் ரவி போ்ணாம்பட்டு காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் கள்ளிச்சேரி மலையடிவாரத்தில் பதுங்கியிருந்த முத்துவை பிடித்த போலீஸாா் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்துவதற்காக காவல் நிலையம் கொண்டு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com