வேலூா் சத்துவாச்சாரி பகுதியில் முதியவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் சத்துவாச்சாரி வ.உ.சி. நகா் மலையடிவாரத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ரகு (52). இவரது வீட்டருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வந்த சிலா் கத்தியால் குத்தியுள்ளனா். அக்கம்பக்கத்திலிருந்தவா்கள், படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ரகுவை மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஆனால் வழியிலேயே அவா் இறந்தாா். சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இந்நிலையில் அதேபகுதியைச் சோ்ந்த விஜய் (19) என்பவா் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. திங்கள்கிழமை இரவு விஜய் அவரது வீட்டிற்கு வந்தபோது போலீஸாா் அவரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா் ரகுவை கத்தியால் குத்தி கொலை செய்ததை ஒப்புக் கொண்டதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.