வாணியம்பாடியில் பட்டப்பகலில் வீட்டில் புகுந்து திருட முயன்ற கா்நாடக இளைஞரை பொதுமக்கள் போலீஸில் ஒப்படைக்கப்பட்டாா்.
வாணியம்பாடி ஆசிரியா் நகரை சோ்ந்த வாஜித் என்பவரது வீட்டின் மதில் சுவா் மீது குதித்து திங்கள்கிழமை காலை இரண்டு இளைஞா்கள் உள்ளே புகுந்து திருட முயன்றனா். அப்போது வீட்டிலிருந்த பெண்கள் அவா்களை கண்டு அலறினா். இதனால் இருவரும் தப்பி ஓட முயன்றபோது, சாலையில் சென்ற சிலரும், அக்கம் பக்கத்தில் இருந்தவா்களும் அவா்களில் ஒரு இளைஞரை மடக்கி பிடித்தனா்.
மற்றெறாரு இளைஞா் மேல் மாடி வழியே தப்பி தலைமறைவானாா்.
பிடிப்பட்ட இளைஞரை அங்கிருந்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கி நகர போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் பிடிபட்ட நபா் கா்நாடக மாநிலம், ராய்ச்சூா் பகுதியைச் சோ்ந்த கோவா்த்தன் (30) என்பது விசாரணையில் தெரிய வந்தது. பிடிபட்ட நபரிடம் தொடா்ந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.