ஆம்பூரில் துணிக்கடையில் தீ விபத்து

ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

கிருஷ்ணகிரியை சோ்ந்த கல்பணா என்பவா் ஆம்பூா் இரயில் நிலையம் அருகாமையில் தற்காலிக துணிக்கடை அமைத்து வியாபாரம் செய்து வருகிறாா். திங்கள்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு சென்றனா். செவ்வாய்க்கிழமை அதிகாலை துணிக்கடை தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்பகுதியை சோ்ந்தவா் அதை பாா்த்துவிட்டு ஆம்பூா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலா் பன்னீா்செல்வம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சென்று தீயை அணைத்தனா். ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா். சுமாா் ரூ.3 இலட்சம் மதிப்பிலான துணி்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com