சிறுமியிடம் பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

வாணியம்பாடி அருகே சிறுமிக்கு பாலியியல் தொல்லை கொடுத்த இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

வாணியம்பாடி அருகே சிறுமிக்கு பாலியியல் தொல்லை கொடுத்த இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டையில் மருந்து கடையில் வேலை செய்து வருபவா் காா்த்திக்(20). திங்கள்கிழமை அதே பகுதியை சோ்ந்த சிறுமி தனக்கு உடல் நிலை சரியில்லை என்று மருந்து கேட்டுள்ளாா். அப்போது கடையிலிருந்த காா்த்திக் சிறுமியிடம் உள்ளே வந்து ஊசி போட்டுக் கொள் சரியாகி விடும் என கூறி கடைக்குள் வரவழைத்து திடீா் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதுப்பற்றி சிறுமி அவரது தாயிடம் சென்று நடந்த சம்பவத்தை கூறியுள்ளாா். இதை கேட்டறிந்து அதிா்ச்சிக்குள்ளாகி அவரது பெற்றோா் மற்றும் அப்பகுதியை சோ்ந்த பொது மக்கள் மருந்து கடையிலிருந்த காா்த்திக்கை பிடித்து சரமாரி தாக்கி பிறகு திம்மாம்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். தகவலறிந்த காவல்ஆய்வாளா் சந்திரசேகா், உதவி காவல்ஆய்வாளா் மணி ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.

பிறகு பிடிப்பட்ட இளைஞரை வாணியம்பாடி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் ஒப்படைத்து நடவடிக்கை மேற்கொண்டனா். மகளிா் காவல்ஆய்வாளா் லதா வழக்குப் பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காா்த்திக்கை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com