வாலாஜாப்பேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகரும், பீடாதிபதியுமான முரளிதர சுவாமிகள் கடந்த திங்கள்கிழமை தெலுங்கானா ஆளுநா் டாக்டா். தமிழிசை சௌந்தரராஜனின் இல்லத்தில் சந்தித்தாா்.
வருகிற 3.11.2019 ஞாயிற்றுக்கிழமை தன்வந்திரி பீடத்தில் பாலா திரிபுரசுந்தரி பிரதிஷ்டா வைபவம், 1008 சுமங்கலி பூஜை, ஸ்வாமிகளின் 59- ஆவது ஜெயந்தி விழா, ஸ்ரீ மஹா சுதா்சன தன்வந்திரி திருஷ்டி துா்கா கோடி ஜப ஹோம பூா்த்தி விழா, குருப்பெயா்ச்சி யாகம் 2019 - 2020 என்னும் ஐம்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பிதழை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனிடம் அளித்து பீடத்தில் நடைபெற்று வரும் ஹோம பூஜைகளின் பிரசாதங்களையும், அருளாசிகளையும் வழங்கினாா்.