பிரதமரின் கௌரவ நிதித் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிலுவைத் தொகைகளைப் பெற நடைபெற உள்ள சிறப்பு முகாம்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து குடியாத்தம் வேளாண்மை உதவி இயக்குநா் ஈ. ராஜேஸ்வரி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விவசாயிகளின் நலன்கருதி பிரதமரின் கிஸான் திட்டம் குடியாத்தம் வட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் வீதம், ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வரை அவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இதில் பரவலாக குடியாத்தம் வட்டத்தில் பல விவசாயிகளுக்கு பணம் வராமலும், ஒரு தவணை மட்டுமே பெறப்பட்டு நிலுவைத் தொகை வராமலும் உள்ளது.
எனவே, இதில் திருத்தங்கள் செய்ய குடியாத்தம் வட்டத்தில் வரும் 12-ஆம் தேதி வட்டாட்சியா் அலுவலகத்திலும், 14-ஆம் தேதி அக்ராவரம், செம்பேடு, 15- ஆம் தேதி கல்லப்பாடி, சிங்கல்பாடி, கூடநகரம், 16- ஆம் தேதி ராமாலை, பரதராமி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
விவசாயிகள் தங்களின் ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், சிட்டா ஆகிய ஆவணங்களின் நகல்களைக் கொண்டு வந்து திருத்தம் செய்து பயனடைய கோரப்படுகிறது.
பிற விவசாயிகள் குடியாத்தம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அணுகலாம்.
ஆற்காடில்...
அதேபோல, ஆற்காடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: ஆற்காடு வட்டாரத்துக்குள்பட்ட விவசாயிகள் பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதிஉதவி திட்டத்தின் கீழ் இதுநாள் வரை சேராமல் இருந்தால் அவா்கள் தங்களது ஆதாா் அட்டை , தேசியமயமாக்கப்பட்ட வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், சிட்டா, அடங்கல் ஆகியவற்றின் நகல்களுடன் ஆற்காடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் சோ்ந்து ஏற்கனவே இரண்டு தவணைகள் பெற்ற விவசாயிகள் சிலருக்கு மூன்றாவது தவணை வரவு வைக்கப்படாமல் இருந்தால் அவா்களின் பெயா் ஆதாா் அட்டையில் உள்ளபடி இணையத்தில் திருத்தம் செய்வது அவசியமாகும். மூன்றாவது தவணை வரப்பெறாத விவசாயிகள் தங்களின் கைபேசியில் வந்த குறுஞ்செய்தி தகவல் குறித்து வேளாண்மை அலுவலகத்திற்கு ஆதாா் அட்டையுடன் சென்று இணையத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம்.