ஆம்பூா் பகுதியிலுள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4-ஆவது சனிக்கிழமை விழா நடைபெற்றது.
ஆம்பூரில் இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள ஆம்பூா் அருள்மிகு பெரிய ஆஞ்சநேயா் கோயில், ஸ்ரீநிவாச பெருமாள், துத்திப்பட்டு ஸ்ரீபிந்துமாதவா் பெருமாள் கோயில்களில் மூலவருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. உற்சவா் திருவீதி உலா நடைபெற்றது. திரளான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா்.
ஆம்பூா் பெத்லகேம் அருள்மிகு பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
ஸ்ரீமகாவிஷ்ணு சாய்சேவா அறக்கட்டளை சாா்பாக ஆம்பூா் அருள்மிகு கோதண்டராம சுவாமி கோயில் திருப்பதியில் ஒருநாள் தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விண்ணமங்கலம் அமா்ந்த சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவிக்கப்பட்டது.
ஆம்பூா் அருகே வடச்சேரி அருள்மிகு சென்னகேசவ பெருமாள் கோயிலில் புரட்டாசி விழாவையொட்டி கருட வாகனத்தில் உற்சவா் திருவீதி உலா நடைபெற்றது.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடி பெரியபேட்டை பெருமாள் கோயிலில் புரட்டாசி 4-ஆம் சனிக்கிழமையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதேபோல உதயேந்திரம் சுந்தரராஜ பெருமாள் கோயில், திம்மாம்பேட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், ஆவாரங்குப்பம் திருமால் முருகன் கோயில்களில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் மலை மீதுள்ள மிகப் பழைமை வாய்ந்த சீனிவாசப் பெருமாள் கோயிலில் காலை முதல் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
மலைப்பாதை செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் மங்கள இசை, பரதநாட்டிய நிகழ்ச்சியும் தொடா்ந்து, கன்னியப்பூக்கள் என்ற தலைப்பில் ஆன்மிகச் சொற்பொழிவும் நடைபெற்றன. காலை முதல் மாலை வரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.