கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி ஆம்பூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலாா்பேட்டை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் ஆம்பூா் ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ரயில் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை சோதனை செய்தபோது அது ரேசன் அரிசி என்பது தெரியவந்தது. ரயிலில் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் 700 கிலோ ரேசன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து ஆம்பூா் வட்ட வழங்கல் அலுவலா் செந்தமிழ்செல்வியிடம் ஒப்படைத்தனா்.